Kavadi Kattiyam

கட்டியம்

சண்ட பிரசண்ட விதண்ட மூதண்டகோ
தண்டபாணிக்கு மருகன்
தத்திமித்தால் மோடொத்து நின்றாடிய
சதாசிவம் பெற்ற முருகன்
தண்டமிழ் நிறைந்திடும் அன்றும் முனிவரும்
தான் வணங்கிய வேலவன்
சாலோக சாமீப சாரூப சாயுச்ய
சகல மோட்ச அதிகார கர்த்தன்
அகாதெப்படியென்றால்
ஐங்கரற்கிளைய ஆறுமா முகவன்
ஈஸ்வரி புதல்வன் ஈராறு புயத்தோன்
வள்ளி தெய்வானை மனமகிழ் கொழுநன்
சேவற் கொடியோன் சிகிவா கனத்தோன்
கருணா கடாக்ஷ வீட்சண்ணிய அலங்காரன்
உத்தண்ட மண்டலீகரன்
மதன் மோகன வசீகரன்
பஞ்ச பாண அவதாரம்
அஷ்ட ஐஸ்வர்ய சம்பன்னன்
அஷ்ட நிகர சிஷ்டபரி பாலன்
மந்தரமாகா மாணிக்க மகுடாலங்கரான்
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன்
ஆபத் பயந்தவன் அனாதைரட்சகன்
அனந்தகோடி அண்டங்களும் இருநூற்று இருபத்து நாலு புவனங்களும் சப்தசாகரஞ் சூழ நின்ற

ஈரேழுபதினாலு லோகமும் காக்கும் வேலையே கைக்கொண்டு ஏகசக்ராதி பத்தியஞ் செலுத்தி ஒப்பற்ற சுந்தரவட்டக் குடையின் நிழலிருந்தருளப் பெற்ற ஸ்ரீ ஸ்ரீ சிவசுப்பிரமணிய கடவுள் அன்னதானம், சொர்ணதானம், கோதானம், பூதானம் எனும் பற்பல தானங்களும் வழங்கி இன்றைய தினம் (ஊர் பெயர்) வாழ் அனைவரையும் அருள்புரிந்தோம் என்றும் ஆள்கிறோமென்றும் தீர்த்தப் பிரசாதம் திருநீறு கொடுத்துப் பாவையராட பல்லிய முழங்க நாவலர் போற்ற நல்விருதுடனே குவலயம் புகழும் விண்ணளவோங்க எண்ணிலா வணிகர் பொன்னினாற் செய்த புனித மண்டபத்திற் நவரத்தினமும் நனிபெற இழைத்த தமது இரத்தின சிம்மாசனக் கொலுவிற்கு இதோ எழுந்தருளி வறுகிறார் வெகுபராக் எச்சரிக்கை

(குறிப்பு : (காரையம்பதியில்) எந்த ஊரில் கட்டியம் சொல்லுகிறோமோ அந்த ஊரின் பேரைச் சொல்ல வேண்டும்)

ஸ்ரீ சண்முகநாதன் திருவடி சரணம்

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *