கருப்பர் பாடல்கள்

வந்தான் கருப்பன் விளையாட
வாளில் ஏறி நின்றாட
வந்தான் கருப்பன் விளையாட
வாளில் ஏறி நின்றாட – (கோரஸ்)
வாளும் வேலும் விளையாட
வாளில் ஏறி நின்றாட
சுக்கு மாந்தடி சுழன்றாட
வந்தான் கருப்பன் விளையாட
காலில் சலங்கை கலகலக்க
கையில் வாளும் பளபளக்க
முருக்கு மீசை துடி துடிக்க
வந்தான் கருப்பன் விளையாட
பாலும் சோறும் கமகமக்க
பள்ளயம் இங்கே ஜொலி ஜொலிக்க
பிள்ளைகள் நாங்கள் கொண்டாட
வந்தான் கருப்பன் விளையாட
சந்தன கருப்பன் தானாட
சங்கிலி கருப்பன் உடனாட
பதினெட்டாம் படி கருப்பனுமே
வந்தான் இங்கே விளையாட
முன்னோடியும் இங்கே ஓடிவர
நொண்டியும் இங்கே ஆடிவர
பதினெட்டாம் படி கருப்பனுமே
வந்தான் இங்கே விளையாட
கொரட்டி எனும் ஓர் ஆலயமாம்
அங்கே கூடியிருப்பவன் சாஸ்தாவம்
தங்கையும் அங்கே அருகிருக்க
தரணியை ஆழ வந்தானாம்
காவடி சுனந்து நடைபோட
பழனியை நோக்கி விரைந்தோட
பதினெட்டாம் படி கருப்பனுமே
வந்தான் இங்கே விளையாட
இருமுடி சுமந்து நடைபோட
சபரியை நோக்கி விரைந்தோட
பதினெட்டாம் படி கருப்பனுமே
வந்தான் இங்கே விளையாட
கருப்பர் அழைப்பு
கருப்பா கருப்பா கருப்பையா கவலையை தீர்ப்பாய் கருப்பையா
கருப்பா கருப்பா கருப்பையா கவலையை தீர்ப்பாய் கருப்பையா
கருப்பா உன்னை அழைக்கின்றேன்
காவியம் பாடித் துதிக்கின்றேன்
கண்ணின் மணியை அழைக்கின்றேன்
காலமும் உன்னை துதிக்கின்றேன்
கோட்டை கருப்பரை அழைக்கின்றேன்
கொடுமைகள் அழிய துதிக்கின்றேன்
வேட்டை செல்கையில் அலைகின்றேன்
வெற்றியைத் தந்திட துதிக்கின்றேன்
சங்கிலிக் கருப்பரை அழைக்கின்றேன்
சங்கடம் தீர்த்திட துதிக்கின்றேன்
சந்ததி தழைக்க அழைக்கின்றேன்
சரணம் பாடித் துதிக்கின்றேன்
காளியம்மனை அழைக்கின்றேன்
கவிதைகள் பாடித் துதிக்கின்றேன்
கரங்கள் கூப்பி அழைக்கின்றேன்
கவலைகள் தீர்த்திட துதிக்கின்றேன்
சின்னக் கருப்பரை அழைக்கின்றேன்
சிறுமைகள் தீர துதிக்கின்றேன்
சிங்காரக் கருப்பரை அழைக்கின்றேன்
சிறப்புகளைத் தர துதிக்கின்றேன்
முத்துக் கருப்பரை அழைக்கின்றேன்
முத்தமிழ் பாடி துதிக்கின்றேன்
முப்பலி கொடுத்து அழைக்கின்றேன்
முறையாய் உன்னை துதிக்கின்றேன்
அன்பால் உன்னை அழைக்கின்றேன்
அமைதியைத் தந்திட துதிக்கின்றேன்
மனதால் உன்னை அழைக்கின்றேன்
மங்கலங்கள் தர துதிக்கின்றேன்
காக்கும் தெய்வமே
காக்கும் தெய்வமே எங்கள்
கருப்பர் தெய்வமே – நாங்கள்
நோக்கும் இடமெல்லாம்
உந்தன் வீரத்தோற்றமே
அள்ளிச் சொருகிய மலர்
அழகுக் கொண்டையும் – வளர்
துள்ளுமீசையும் உந்தன்
எழிலைக் கூட்டுத்தே
பகையளித்திடும் – சிறந்த
பரந்த தோள்களும் – நல்ல
கருத்தமேனியும் உந்தன்
வலிமை காட்டுதே
காடு வீடெல்லாம் – உந்தன்
காவலில் உண்டு – உயர்
படி பதினெட்டும் – உந்தன்
பார்வையில் உண்டு
ஜாதி மல்லிகை – உயர்
சாந்து ஜவ்வாது – மணக்கும்
சாம்பி ராணியும் – உந்தன்
வரவைக் கூறுதே
சாய வெட்டியும் – உயர்
ஜரிகைப் பட்டுமே – உந்தன்
மேனி அழகிலே – தவழ்ந்து
மின்னிச் ஜோலிக்குதே
வெள்ளை குதிரையும் – உயர்
வீச்சரி வாளும் – நல்ல
தண்டை கிண்கிணி – முழங்க
இங்கு வாருமே’
சுழன்றா டிடும் – அழகுச்
சுக்கு மாந்தடி – எடுத்து
விளை யாடியே – ஐயா
ஒடி வாருமே
கெட்டி மேளமே – கொட்டி
உனை யழைக்கவே – இந்த
செட்டி மக்களாம் – நாங்கள்
சேர்ந்து வணங்கிடும்