ஸ்ரீ சுவாமி ஐய்யப்பன்

பகவான் சரணம் பகவதி சரணம் -ஐயப்பன் பாடல் வரிகள்

பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா

அகமும் குளிரவே அழைத்திடுவோமே
சரணம் சரணம் ஐயப்பா
பகலும் இரவும் உன் நாமமே
சரணம் சரணம் ஐயப்பா – (பகவான்)

கரிமலை வாசா பாபவினாசா
சரணம் சரணம் ஐயப்பா
கருத்தினில் வருவாய் கருனையைப் பொழிவாய்
சரணம் சரணம் ஐயப்பா

சுவாமியே – ஐயப்போ
ஐயப்போ – சுவாமியே
சுவாமியே – ஐயப்போ
ஐயப்போ – சுவாமியே (பகவான்)

மஹிஷி சம்ஹாரா மதகஜ வாகன
சரணம் சரணம் ஐயப்பா
சுகுண விலாசா சுந்தர ரூபா
சரணம் சரணம் ஐயப்பா

பாலபிஷேகம் உனக்கப்பா – இப்
பாலனை கடைகண் பாரப்பா
ஆறு வாரமே நோன்பிருந்தோம்
பேரழகா உனைக் காண வந்தோம்

இருமுடிக் கட்டு – சபரிமலைக்கு
சபரிமலைக்கு – இருமுடிக் கட்டு
நெய் அபிஷேகம் – சுவாமிக்கே
சுவாமிக்கே – நெய் அபிஷேகம் – (பகவான்)

முத்திரை தேங்காய் உனக்கப்பா
தித்திக்கும் நாமம் எனக்கப்பா
கற்பூர தீபம் உனக்கப்பா – உன்
பொற்பத மலர்கள் எனக்கப்பா

நெய் அபிஷேகம் உனக்கப்பா – உன்
திவ்ய தரிசனம் எனக்கப்பா
தையினில் வருவோம் ஐயப்பா
அருள் செய்யப்பா – மனம் வையப்பா – (பகவான்)

சுவாமியே – ஐயப்போ
ஐயப்போ – சுவாமியே
பள்ளிக்கட்டு – சபரிமலைக்கு
சபரிமலைக்கு – பள்ளிக்கட்டு

தேவன் பாதம் தேவி பாதம்
சேவடி சரணம் ஐயப்பா
நாவினில் தருவாய் கீதமப்பா
தேவை உன் திருப் பாதமப்பா – (பகவான்)

பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டுபோனால்

பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டுபோனால்
ஐய்யனை நீ காணலாம் சபரியில் ஐய்யனை நீ காணலாம்

அய்யாப்பா சுவாமி அய்யாப்பா
அய்யாப்பா சரணம் அய்யாப்பா
அய்யாப்பா சுவாமி அய்யாப்பா
அய்யாப்பா சரணம் அய்யாப்பா

அவனை நாடு அவன் புகழ் பாடு
புகழோடு வாழ வைப்பான் அய்யப்பன் – நல்ல
புகழோடு வாழ வைப்பான் அய்யப்பன்
இருப்பது காடு வணங்குது நாடு
அவனை காண தேவை பண்பாடு

அய்யாப்பா சுவாமி அய்யாப்பா
அய்யாப்பா சரணம் அய்யாப்பா

பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டுபோனால்
ஐய்யனை நீ காணலாம் சபரியில் ஐய்யனை நீ காணலாம்

அய்யாப்பா சுவாமி அய்யாப்பா
அய்யாப்பா சரணம் அய்யாப்பா

பூஜைகள் போடு தூய அன்போடு
பெயரோடு வாழ வைப்பான் அய்யப்பன் – நம்மை
பெயரோடு வாழ வைப்பான் அய்யப்பன்
அனைவரும் வாருங்கள் அய்யனை நாடுங்கள்
அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழ வைப்பான்
அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழ வைப்பான்

அய்யாப்பா சுவாமி அய்யாப்பா
அய்யாப்பா சரணம் அய்யாப்பா

பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டுபோனால்
ஐய்யனை நீ காணலாம் சபரியில் ஐய்யனை நீ காணலாம்

Call